ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையருகே இந்திய விமானப் படையின் 'மிக்' வகை விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையருகே அமைந்துள்ள மாவட்டம் பிகானீர். இங்கு வெள்ளியன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையின் 'மிக்' வகை விமானம் ஒன்று மதியம் திடீரென்று நொறுங்கி விழுந்து விபத்துக்குளானது.
இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டு மையத்துடன் கடைசியாகத் தொடர்பு கொண்டு தெரிவித்த தகவலின்படி, விமானமானது தொழில்நுட்பக்க கோளாறின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது தெரிய வருகிறது.
இதனையடுத்து விமானிகள் உடனடியாக அதிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து விமானிகள் இருவரும் வெளியேறியுள்ளனரா அல்லது ஒருவர் மட்டுமா என்பது சம்பவ இடத்திற்கு தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
உள்ளூர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ்! அடுத்தடுத்து வெளியான பட அறிவிப்புகள்!

அமைச்சரவையில் இடமில்லை! பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

தில்லியில் மின்சார வாகனப் பதிவுகள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியின் ஊழலை ஒழித்தது தவெக! ஆதவ் அர்ஜுனா
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



