ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையருகே இந்திய விமானப் படையின் 'மிக்' வகை விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையருகே அமைந்துள்ள மாவட்டம் பிகானீர். இங்கு வெள்ளியன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையின் 'மிக்' வகை விமானம் ஒன்று மதியம் திடீரென்று நொறுங்கி விழுந்து விபத்துக்குளானது.
இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டு மையத்துடன் கடைசியாகத் தொடர்பு கொண்டு தெரிவித்த தகவலின்படி, விமானமானது தொழில்நுட்பக்க கோளாறின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது தெரிய வருகிறது.
இதனையடுத்து விமானிகள் உடனடியாக அதிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து விமானிகள் இருவரும் வெளியேறியுள்ளனரா அல்லது ஒருவர் மட்டுமா என்பது சம்பவ இடத்திற்கு தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
உள்ளூர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


