மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சர்ச்சைக்குரிய பெண் துறவி சாத்வி பிரக்யா பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை 

மத துவேஷப் பேச்சின் காரணமாக சர்ச்சைக்குரிய பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தேர்தல் பிரசாரம் செய்ய 3 நாட்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

News image
Updated On :1 மே 2019, 3:25 pm

DIN

புது தில்லி: மத துவேஷப் பேச்சின் காரணமாக சர்ச்சைக்குரிய பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தேர்தல் பிரசாரம் செய்ய 3 நாட்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை எதிர்த்து, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் துறவி  சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மத துவேஷப் பேச்சின் காரணமாக சர்ச்சைக்குரிய பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தேர்தல் பிரசாரம் செய்ய 3 நாட்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சாத்வி பிரக்யா சிங் தாக்கூர்  தேர்தல் பிரசாரம் செய்யும் போது, 'அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்' என்று பேசியிருந்தார். 

அவரது இந்த கருத்து தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிய வகையில் அமைந்திருந்ததாக தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் சார்பில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகார் மீது புதனன்று விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன், வியாழன் காலை 6 மணியில் இருந்து அடுத்த 3 நாட்களுக்கு சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பிரசாரம் செய்ய கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.