கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிவசேனை அமைச்சர் ராஜிநாமா எதிரொலி: பிரகாஷ் ஜாவடேகருக்கு கூடுதல் பொறுப்பு

தங்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த்தை பதவி விலக சிவசேனை பணித்தது. 

News image
Updated On :12 நவம்பர் 2019, 5:34 am

DIN

சிவசேனை கட்சியைச் சேர்ந்த மத்திய கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். 

பாஜக கூட்டணியில் இருந்து விலகினால்தான் சிவசேனைக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் கூறியிருந்தது. இந்த நிபந்தனையை ஏற்று தங்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த்தை பதவி விலக சிவசேனை பணித்தது. 

தில்லியில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்த அரவிந்த் சாவந்த் இது தொடர்பாக கூறுகையில், "எனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவிட்டேன்' என்றார். அப்போது, தனது ராஜிநாமா கடிதத்தின் நகலையும் அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இந்நிலையில், கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சரவை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.