

ராஜஸ்தானில் கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வை மீண்டும் ஆட்சியமைக்க விடமால் தடுக்கும் விதமாக பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து ஆட்சியமைக்க உதவியது. மேலும் 12 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.
இந்நிலையில், 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இரவு இணைந்தனர். இதனால் அங்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தங்கள் தொகுதி மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் விதமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.