விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம்: மத்திய அரசு பிறப்பித்தது

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை பிறப்பித்தது. முன்னதாக, இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

News image
Updated On :20 செப்டம்பர் 2019, 1:33 am IST


இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை பிறப்பித்தது. முன்னதாக, இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதன்படி, இந்தியாவில் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விநியோகம், விற்பனை,  இ-சிகரெட் சார்ந்த புகைப் பிடிக்கும் கருவிகள் தொடர்பான விளம்பரங்கள் ஆகிவற்றை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ.1 லட்சம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே தவறைச் செய்தால் 3 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
அதேபோல இ-சிகரெட் வைத்திருந்தால் ரூ.50,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை அல்லது இவை இரண்டும் சேர்ந்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தவிர இ-சிகரெட் வைத்திருப்பதாகவோ, உற்பத்தி செய்வதாகவோ சந்தேகம் எழுந்தால் சோதனை நடத்தவும் அதிகாரிகளுக்கு இந்த அவசரச் சட்டம் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு இ-சிகரெட் வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்த முடியாது என்ற நிலை இருந்தது.
இப்போது கைவசம் இ-சிகரெட்டுகளை இருப்பு வைத்திருப்பவர்கள், அது தொடர்பான முழு விவரத்தையும் அதிகாரிகளிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், இப்போது இ-சிகரெட் விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பயன்படுத்துவோர் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வரும் சாதாரண வகை சிகரெட் தயாரிப்பாளர்களை ஆதரிக்கும் நோக்கத்திலேயே மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இ-சிகரெட் பிரபலமானால், அவர்களது வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும். எனவேதான் இ-சிகரெட்டை மத்திய அரசு உள்நோக்கத்துடன் தடை செய்துள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.