கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அமெரிக்காவில் இவர்களையும் சந்திக்கிறார் பிரதமர் மோடி..

அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான சந்திப்பு மற்றும் ஐ.நா. கூட்டம் தவிர கார்ப்ரேட் நிறுவனங்களின் சிஇஓ-க்களையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

News image

கோப்புப்படம்

Updated On :19 செப்டம்பர் 2019, 5:58 pm

DIN


அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான சந்திப்பு மற்றும் ஐ.நா. கூட்டம் தவிர கார்ப்ரேட் நிறுவனங்களின் சிஇஓ-க்களையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபையின் 74-வது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி செப்டம்பர் 28-ஆம் தேதி காலை உரையாற்றுகிறார். 

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் செப்டம்பர் 22-ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்கிறார்.  
இதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 30 வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

இந்த அமெரிக்கப் பயணத்தின்போது டொனால்ட் டிரம்பைச் சந்திப்பது, ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றுவது தவிர, மற்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஹூஸ்டன் நகரில் செப்டம்பர் 21-ஆம் தேதி பிபி, எக்ஸன்மொபில், எமெர்சன் எலக்ட்ரிக் நிறுவனம், வின்மார் இன்டர்நேஷனல் மற்றும் ஐஹெச்எஸ் மார்கிட் போன்ற 12 தொழில் நிறுவனத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் சிலரைச் சந்தித்து, இந்தியாவில் தொழில் செய்ய பிரதமர் மோடி ஊக்குவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.