அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளராக முன்னாள் பத்திரிகையாளர் சுப்ரியா ஸ்ரீனேட் என்பவரை நியமித்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரும், மறைந்த உத்தரப் பிரதேச மாநில நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ் வர்தனின் மகள் சுப்ரியா ஸ்ரீனேட் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச ம் மகாராஜ்கஞ்ச்(Maharajganj) தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஸ்ரீனேட் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் அமர்மானி திரிபாதியின் மகள் தனுஸ்ரீ திரிபாதி, மகாராஜ்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அவர் போட்டியிட கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவருக்குப் பதிலாக சுப்ரியா ஸ்ரீனேட் களமிறக்கப்பட்டு தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இருந்த போதிலும், முன்னாள் பத்திரிகையாளர் என்பதை வைத்து அவருக்கு காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்

காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்

எல்&டி 4வது காலாண்டு லாபம் 3% சரிவு!

மேற்கு வங்கத்தில் பாஜக வென்ற மறுநாளே திறக்கப்பட்ட பழமையான துர்கா கோயில்!
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


