கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா: மன்மோகன் சிங்குக்கு பாக்., அழைப்பு

கர்தார்பூர் வழித்தடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க, காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 செப்டம்பர் 2019, 3:58 pm

DIN


கர்தார்பூர் வழித்தடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க, காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.  

சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். 

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன. குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்த வழித்தடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

இந்நிலையில் இதன் திறப்பு விழாவில் பங்கேற்க மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 

"இந்த திறப்பு விழாவுக்கு நாங்கள் மிகப் பெரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். இதற்காக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க முடிவு செய்துள்ளோம். அவர் மிகுந்த மரியாதைக்குரியவர். அதேசமயம், அவர் சீக்கிய மதத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறார். பாகிஸ்தான் அரசு சார்பாக, நான் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன். எழுத்துப்பூர்வமாகவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படும். அனைத்து சீக்கிய யாத்ரீகர்கள் கர்தார்பூர் வர வேண்டும். குருநானக்கின் 550-வது பிறந்தநாள் விழாவில் அவர்கள் பங்கேற்க வேண்டும்" என்றார்.

ஆனால், பாகிஸ்தானின் இந்த அழைப்பை மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.