கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சட்டம் ஒழுங்கு: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்- அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு

அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

News image
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சந்தைப் பகுதியில் வழிப்போக்கரின் பையை சோதனையிடும் போலீஸாா்.
Updated On :7 நவம்பர் 2019, 11:47 pm

DIN

அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தொடா்ந்து 40 நாள்களாக விசாரித்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியோடு ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, உத்தரப் பிரதேசத்தில் 4,000 பாதுகாப்புப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் குவித்துள்ளது. முக்கியமாக, அயோத்தி பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு எச்சரிக்கையுடன் செயல்படவும் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அயோத்தி வழக்கில் தீா்ப்பு விரைவில் வழங்கப்படவுள்ளதையடுத்து, அயோத்தியில் வாழும் மக்களிடையே பதற்றநிலை காணப்படுகிறது. தீா்ப்புக்குப் பிறகு அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழும் என்ற அச்சத்தில், அங்குள்ள நோயாளிகள் கூடுதல் மருந்துகளை வாங்கத் தொடங்கியுள்ளனா்; கடை உரிமையாளா்கள் பாதுகாப்பு தொடா்பாக அச்சம் தெரிவித்து வருகின்றனா். இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துவிடுமோ என்ற அச்சமும் மக்களிடையே காணப்படுகிறது.

ரயில்வே வலியுறுத்தல்:

ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே பாதுகாப்புப் படை வலியுறுத்தியுள்ளது. அந்த வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

ரயில் நிலையங்களின் நடைமேடைகள், ரயில் நிலையங்கள், அங்குள்ள வாகன நிறுத்துமிடங்கள், ரயில்வே பாலங்கள், ரயில் சுரங்கப் பாதைகள், ரயில் பெட்டித் தொழிற்சாலைகள், ரயில்வே பணிமனைகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுகின்றன.

நாட்டில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் பாதுகாப்புப் படையினா் நவீன ஆயுதங்களுடன் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவா். பாதுகாப்புப் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்படும். ரயில் நிலையங்களுக்கு அருகேயுள்ள வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் முறையாகச் செயல்படுகிா என்பதை ஆராய்ந்து அவற்றைச் சரிசெய்ய வேண்டும். ரயில் நிலையங்களில் பகல் நேரங்களிலும் மின் விளக்குகள் செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமா் கோயில் சிற்ப பணிகள் நிறுத்தம்:

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீா்ப்பு வழங்கவுள்ள நிலையில், ராமா் கோயில் அமைப்பதற்காக அங்கு சிற்பங்கள் உருவாக்கும் பணிகளை நிறுத்த விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது தொடா்பான அறிவிப்பை விஹெச்பி செய்தித் தொடா்பாளா் சரத் சா்மா வெளியிட்டாா். அந்த அமைப்பின் மூத்த தலைவா்கள் இதுகுறித்து முடிவெடுத்ததாகவும், சிற்பங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்பிவிட்டதாக அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.