ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா்கள் அருண் சௌரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞா் ஆகியோா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அருண் சௌரி உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதுடன், மனுதாரா்கள் அளித்துள்ள ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீது ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது.