மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் 65 வயது மூதாட்டி பலி: புதிதாக 26 பேருக்கு கரோனா உறுதி

ராஜஸ்தானில் 65 வயது பெண் கரோனா தொற்று நோய்க்கு இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :10 ஏப்ரல் 2020, 5:31 am

PTI

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 65 வயது மூதாட்டி கரோனா தொற்று நோய்க்கு இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உலகளவில் ஆட்கொல்லி நோயான கரோனா வைரஸ் நாளுக்கு நாள் பல உயிர்களை பலிவாங்கி வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். 

இந்நிலையில், ராஜஸ்தானில் 65 வயதுள்ள பெண் கரோனாவுக்கு இன்று பலியாகியுள்ளார். நோய்த் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 489 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 26 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 

ஜெய்ப்பூரில் உள்ள ராம்கஞ்சைச் சேர்ந்த பெண் புதன்கிழமை எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு, நிமோனியா மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

கடந்த 12 மணி நேரத்தில் 26 பேருக்கு புதிதாக கரோனா பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12 பேர் பன்ஸ்வாராவிலும், 8 பேரில் 3 ஜெய்சால்மேர் மற்றும் ஆல்வார், பரத்பூர் மற்றும் கோட்டாவில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்தம் 489 பேர் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 168 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.