/

யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை இன்று காலமானார்.

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 7:30 am

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை இன்று காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் கடந்த மார்ச் 15ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 10.44மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். இத்தகவலை உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் உறுதி செய்துள்ளார்.

ஆனந்த் சிங் பிஷ்ட் வனக்காவலராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.