சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

மும்பை தாராவியில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் பலி

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று மட்டும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று மட்டும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்த நிலையில் மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று மட்டும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து தாராவியில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 214ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இன்று ஒருவர் பலியானதை சேர்ந்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே புனேயில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடையவர் இன்று பலியானார். 

இதைத்தொடர்ந்து புனே மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருக்கிறது. இங்கு பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இத்துடன் இங்கு 6,427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 86 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.