மும்பை தாராவியில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் பலி
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று மட்டும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று மட்டும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று மட்டும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து தாராவியில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 214ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இன்று ஒருவர் பலியானதை சேர்ந்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே புனேயில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடையவர் இன்று பலியானார்.
இதைத்தொடர்ந்து புனே மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருக்கிறது. இங்கு பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இத்துடன் இங்கு 6,427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 86 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...