ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

உ.பி.: ஊரடங்கை மீறி 20 பேருக்கு விருந்து கொடுத்தவருக்கு கரோனா

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 54 வயது பெண்மணி, ஊரடங்கு உத்தரவுகளை எல்லாம் மீறி, காஸியாபாத்துக்குச் சென்று 20 பேருக்கு வீட்டிலேயே 

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 1:13 pm

PTI


பஹ்ரைச்: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 54 வயது பெண்மணி, ஊரடங்கு உத்தரவுகளை எல்லாம் மீறி, காஸியாபாத்துக்குச் சென்று 20 பேருக்கு வீட்டிலேயே விருந்து கொடுத்துவிட்டு திரும்பிய நிலையில், அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை எல்லாம் மீறி கடந்த வாரம் இந்த பெண்மணி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இவர் மூலம் எத்தனை பேருக்கு கரோனா பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் காவல்துறையினர் உள்ளனர்.

அந்த பெண் மற்றும் விருந்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.