ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

உத்தரப் பிரதேசத்தில் நான்கு காவலர்களுக்கு கரோனா உறுதி 

உத்தரப் பிரதேசத்தின், ராம்கர் காவல் நிலையத்தில் மூத்த துணை ஆய்வாளர் உள்பட நான்கு காவலருக்கு

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 9:51 am

PTI

பிரோசாபாத்: உத்தரப் பிரதேசத்தின், ராம்கர் காவல் நிலையத்தில் மூத்த துணை ஆய்வாளர் உள்பட நான்கு காவலர்களுக்கு புதன்கிழமை கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ராம்கர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவரைக் கைது செய்தார். பின்னர் அந்த இளைஞருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்று தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.கே. தீட்சித் தெரிவித்தார். 

இதையடுத்து, ராம்கர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 27 காவலர்களின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இளைஞருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவுடன், ராம்கர் காவல் நிலையத்தில் உள்ள காவல்துறை ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதாகத் துணை ஆய்வாளர் பிரபால் பிரதாப் சிங் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.