திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஊதியம் குறைப்பு, வேலை இழப்பு.. மருத்துவர்கள், செவிலியர்களையும் பாதிக்கும் அபாயம்

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பல்வேறு தொழில்கள் முடங்கி ஏராளமானோர் ஊதிய குறைப்பு மற்றும் வேலை இழப்புப் போன்ற பிரச்னைகளை சந்திக்கும் நிலைக்க

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 10:19 am


பெங்களூரு: கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பல்வேறு தொழில்கள் முடங்கி ஏராளமானோர் ஊதிய குறைப்பு மற்றும் வேலை இழப்புப் போன்ற பிரச்னைகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று போராடி வரும் மருத்துவத் துறையினரும் ஊதியக் குறைப்பு, வேலை இழப்புப் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவத் தொடங்கியதும் பல்வேறு தொழில்கள் முடங்கியதைப் போலவே மருத்துவமனைகளும் முடங்கின. பொதுவான உடல் நலக் கோளாறுகள் உள்ளிட்ட சாதாரண நோய்களுக்காக மக்கள் மருத்துவமனைக்கு வருவதை முற்றிலும் தவிர்த்து விட்டனர். இதனால் தனியார் மருத்துவமனைகளும், பல்நோக்கு மருத்துவமனைகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

கரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் இருக்கும் பகுதிகளில் மருத்துவமனைகளே முதல் இடத்தில் உள்ளன. இதனால் பெரும்பாலான மருத்துவமனைகள் நோயாளிகள் இல்லாமல் வெறிச்சோடின.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களுக்கான சங்கத் தலைவர் மருத்துவர் எச்.எம். பிரசன்னா கூறுகையில், தனியார் மருத்துவமனைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கவனித்து வருகிறோம். நிலைமை சீரடையாவிட்டால் ஊதியக் குறைப்பு அல்லது பணி நீக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது வரும். ரூ.30 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெரும் செவிலியர்களுக்கு 10 - 20% ஊதியக் குறைப்பு செய்யப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெறும் மருத்துவர்களுக்கும் ஊதியக் குறைப்பு செய்யப்படும். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பொருளாதார நிலைமை சீரடைந்ததும் பழைய ஊதியத்தைக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் மூடப்பட்டுவிட்டது. பல மருத்துவமனைகளுக்குச் சென்று புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கும் தற்போது பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.