கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஊரடங்கில் தொழில்துறை முடக்கத்தால் ஜூலை மாதத்தில் 14% ஜி.எஸ்.டி வீழ்ச்சி

கரோனா வைரஸ் காரணமாக ஜூலை மாதத்தில் 14% ஜி.எஸ்.டி வீழ்ச்சி

News image
ஜிஎஸ்டிவரி வசூல்
Updated On :1 ஆகஸ்ட் 2020, 12:39 pm

DIN

புதுதில்லி: கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூலை மாதத்தில் 14% ஜி.எஸ்.டி வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் மந்தநிலையை அடைந்துள்ளது.

இதனால் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் 14% ஜி.எஸ்.டி வீழ்ச்சியடைந்து  87 கோடியே 422 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. 

சேகரிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி வருவாயில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி 16 கோடியே 147 லட்சமாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி 21 கோடியே 418 லட்சமாகவும், இறக்குமதி வரி (20 கோடியே 324 லட்சம் ) உட்பட ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி 42 கோடியே 592 லட்சமாகவும் உள்ளது.

எனினும் கடந்த மாதத்திற்கான வருவாய் நடப்பு மாதத்தை விட அதிகமாக இருந்தது. இருப்பினும், முந்தைய மாதத்தில், ஏராளமான வரி செலுத்துவோர் நடப்பாண்டின் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் தொடர்பான வரிகளை செலுத்தியதே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.