மத்திய அமைச்சர் கைலாஷ் செளத்ரிக்கு கரோனா பாதிப்பு
மத்திய வேளாண்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


மத்திய வேளாண்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது செளத்ரி ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"கரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.” என சவுத்ரி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
"கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைத்து நண்பர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கைலாஷ் செளத்ரி தனது நாடாளுமன்றத் தொகுதியான ஜெய்சால்மருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...