இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரூ.2.81 லட்சம் கோடி கூடுதல் செலவினம்: துணை மானியக் கோரிக்கைகள் தாக்கல்!

நிகழ் நிதியாண்டில் ரூ.2.81 லட்சம் கோடி மொத்த கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரி, மக்களவையில் செவ்வாய்க்கிழமை 2-ஆம் கட்ட துணை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

News image
மக்களவை...
Updated On :10 மார்ச் 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

நிகழ் நிதியாண்டில் ரூ.2.81 லட்சம் கோடி மொத்த கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரி, மக்களவையில் செவ்வாய்க்கிழமை 2-ஆம் கட்ட துணை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

ரூ.1.32 லட்சம் கூடுதல் செலவினங்களுடன் முதல் கட்ட துணை மானியக் கோரிக்கைகள், கடந்த டிசம்பரில் குளிா்கால கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இது 72 மானியங்களை உள்ளடக்கியதாகும்.

தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நிகழ் நிதியாண்டில் ரூ.2.81 லட்சம் கோடி மொத்த கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரி, 2-ஆம் கட்ட துணை மானியக் கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

‘நிகழ் நிதியாண்டில் ரூ.2.81 லட்சம் கோடி மொத்த கூடுதல் செலவினங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்படுகிறது. இதில் ரொக்க செலவினம் ரூ.2.01 கோடியாகும். மீதமுள்ள ரூ.80,145 கோடி, அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மேம்படுத்தப்பட்ட வருவாய் அல்லது கடன் மீட்பின் மூலம் ஈடுகட்டப்படும்’ என்று துணை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.