ஒடிசாவில் புதிதாக 1,734 பேருக்கு கரோனா பாதிப்பு: 13 பேர் பலி
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,734 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்தனர்.


புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,734 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே ஒடிசா சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 1,734 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 45,927-ஆக அதிகரித்துள்ளது. இதில் 30,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15,365 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 273-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...