இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தில்லியில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா: 16 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் உயிரிழந்தனர்.

News image
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சந்தியேந்திர ஜெயின்
Updated On :9 ஆகஸ்ட் 2020, 10:57 am

DIN

புதுதில்லி: தில்லியில் நேற்று (சனிக்கிழமை) புதிதாக 1,404 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தில்லியிலும் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது தொடர்பாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சந்தியேந்திர ஜெயின் கூறியதாவது, வெளியில் இருந்து தில்லிக்கு கரோனா பரிசோதனைக்காக வருபவர்களால் தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. வெளியில் இருந்து வருபவர்களை கணக்கில் இருந்து கழித்தால் தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்தே காணப்படும். 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,44,127-ஆக அதிகரித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) 1,130 பேர் குணமடைந்தனர். தற்போது 10,668 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 4,098-ஆக உள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.