/

எதிர்க்கட்சிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் ஆந்திர மாநில அரசு: சந்திரபாபு நாயுடு புகார்

ஆந்திர மாநில அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் அலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்பதாக தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

News image

தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு

Updated On :17 ஆகஸ்ட் 2020, 7:05 am

DIN

ஆந்திர மாநில அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் அலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்பதாக  தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதாக புகாரளித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து, “இதன்மூலம் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கை இந்திய அரசமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும்.” என அக்கடிதத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

மேலும், “இதுபோன்ற சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் தடுக்கப்படாவிட்டால், நாட்டின் நேர்மை மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.” என சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.