அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி: ராமரை வணங்கியதால் 2 இஸ்லாமிய பெண்களுக்கு கொலை மிரட்டல்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் ராமரை வணங்கியதால் 2 இலாமிய பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2020, 12:02 pm

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் ராமரை வணங்கியதால் 2 இலாமிய பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் ரூபி ஆஸிப்கான், நர்கீஸ் மெஹபூபா ஆகிய 2 இஸ்லாமிய பெண்கள் பாஜக பெண்கள் முன்னணியில் உறுப்பினராக உள்ளனர்.

இதனிடையே இந்த 2 பெண்களும் அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை நடைபெற்ற நாளில் குடும்பத்துடன் ராமரை ஆரத்தி எடுத்து வணங்கினர். மேலும் ராமர்கோயில் கட்டுமானத்திற்காக ரூ. 5,100 வழங்கியுள்ளனர். இதனால் தங்கள் உயிருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இஸ்லாமிய மதத்தை விட்டுச் செல்லும்படியும் மிரட்டல் வருவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் 2 பெண்களும் அளித்துள்ள புகாரில், இஸ்லாமிய உடையணிந்து ராமரை வணங்குவது போன்று சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாகவும், இரண்டு பெண்களும் இஸ்லாமியத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டலும் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.