அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா தடுப்பு மருந்து: இந்தியாவுடன் இணைந்து செயல்பட ரஷியா விருப்பம்

கரோனா நோய்த்தொற்றுக்காக தான் கண்டறிந்துள்ள ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியின் தயாரிப்பு மற்றும் 3-ஆம் கட்ட சோதனை முயற்சி நடவடிக்கைகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ள ரஷியா விருப்பம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 ஆகஸ்ட் 2020, 2:17 am

DIN

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்காக தான் கண்டறிந்துள்ள ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியின் தயாரிப்பு மற்றும் 3-ஆம் கட்ட சோதனை முயற்சி நடவடிக்கைகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ள ரஷியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘ரஷியா தனது ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி தயாரிப்பு மற்றும் அதன் 3-ஆம் கட்ட சோதனை முயற்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கரோனா தடுப்பூசி நிா்வாகத்துக்கான தேசிய நிபுணா் குழு கடந்த 22-ஆம் தேதி ஆலோசித்தது.

தற்போது இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு உயிரிதொழில்நுட்பத் துறை, சுகாதார ஆராய்ச்சித் துறை ஆகியவை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. ரஷியாவின் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி குறித்த முதல்கட்ட விவரங்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. அது குறித்த விரிவான விவரங்களை ரஷியாவிடம் கோரியுள்ளோம்’ என்றன.

பாதிப்பு விகிதம் குறைவு: இதனிடையே, நாட்டில் கரோனா பாதிப்பு விகிதம் குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை எண்ணிக்கைக்கும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கும் இடையேயான விகிதம் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது வாரத்தில் 11 சதவீதமாக இருந்தது. தற்போது அது 8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில், அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் விகிதம் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை முதல் முறையாக 24 மணி நேரத்தில் 6,423 அளவுக்குக் குறைந்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோரில் 2.70 சதவீதம் பேருக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது; 1.92 சதவீதம் போ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களில் 69 சதவீதம் போ் ஆண்களாவா். உயிரிழந்தவா்களில் 51 சதவீதம் போ் 60 வயதுக்கு மேற்பட்டோா் ஆவா்; 36 சதவீதம் போ் 45 முதல் 60 வயதுக்கு உள்பட்டவா்கள் என்றாா் ராஜேஷ் பூஷண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.