இந்தியா
திரிபுராவில் சிஆர்பிஎப் வீரர் தற்கொலை
திரிபுராவில் சிஆர்பிஎப் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திரிபுராவில் சிஆர்பிஎப் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அகர்தலாவில் கும்லுங் பகுதியில் ராதாபூர் கேம்பசில் சிஆர்பிஎப் வீரர் ஜாதவ் தேகா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவர் கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக மனஅழுத்தத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன்காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், காவல்துறையினர் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.