தில்லி போராட்டம்: டிசம்பர் 5-இல் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது.
தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.
உறுதியான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “அரசு விவசாயிகளுடன் திறந்த மனதுடன் விவாதித்தது.விவசாயிகள் மின்சார சட்டம் தொடர்பாக தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர். இந்த விஷயங்களையும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து வேளாண் சட்டங்களில் வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.அதைப் பற்றி விவசாயிகளுக்கு நாங்கள் உறுதியளிப்போம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...