மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி போராட்டம்: டிசம்பர் 5-இல் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
தில்லி போராட்டம்: டிசம்பர் 5-இல் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை
Updated On :3 டிசம்பர் 2020, 3:40 pm

DIN

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது.

தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

உறுதியான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “அரசு விவசாயிகளுடன் திறந்த மனதுடன் விவாதித்தது.விவசாயிகள் மின்சார சட்டம் தொடர்பாக தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர். இந்த விஷயங்களையும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து வேளாண் சட்டங்களில் வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.அதைப் பற்றி விவசாயிகளுக்கு நாங்கள் உறுதியளிப்போம்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.