மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘விவசாயிகளை தேசவிரோதி என அழைக்க நீங்கள் யார்?’: சுக்பீர் பாதல் கண்டனம்

விவசாயிகளை தேசவிரோதிகள் என அழைப்பவர்களே உண்மையில் தேசத்திற்கு விரோதமாக செயல்படுகின்றனர் என பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளிவந்த சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் பாதல் தெரிவித்துள்ளார்.

News image
சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் பாதல்
Updated On :3 டிசம்பர் 2020, 11:47 am

DIN

விவசாயிகளை தேசவிரோதிகள் என அழைப்பவர்களே உண்மையில் தேசத்திற்கு விரோதமாக செயல்படுகின்றனர் என பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளிவந்த சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் பாதல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் கடந்த 8 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விவசாயிகள் போரட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் பாதல் விவசாயிகளை விமர்சிப்பவர்களைக் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்த அவர்,“ நாட்டில் உள்ளவர்களை தேச விரோதி என அறிவிக்க பாஜகவுக்கோ அல்லது வேறு யாருக்கோ உரிமை உள்ளதா? இந்த மக்கள் (விவசாயிகள்) தங்கள் முழு வாழ்க்கையையும் தேசத்திற்காக அர்ப்பணித்துள்ளனர்” எனக் கூறினார்.

மேலும், “நீங்கள் அவர்களை தேச விரோதிகள் என்று அழைக்கிறீர்கள். அவர்களை தேசவிரோதிகள் என்று அழைக்கும் நீங்கள் தான் உண்மையில் தேச விரோதிகள்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து “விவசாயிகள் போராட்டங்களில் வயதான பெண்கள் உள்ளனர். அவர்கள் காலிஸ்தானியர்களைப் போலத் தெரிகிறார்களா?. இது விவசாயிகளுக்கு அவமானம் தருவதாகும். எங்கள் விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைப்பதற்கு எவ்வளவு தைரியம்?” என கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுக்தேவ் சிங் திண்ட்சா வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மபூஷண் விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.