பாஜக முதல்வர் போன்று அமரீந்தர் சிங் செயல்படுகிறார்: மணீஷ் சிசோடியா

பாஜக முதல்வரைப் போன்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் செயல்படுவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)

பாஜக முதல்வரைப் போன்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் செயல்படுவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே விவசாயிகளின் போராட்டம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும், இதனால் பஞ்சாபின் நிதிநிலை மோசமடைந்துள்ளதாகவும் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறினார்.

இது குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது, ''விவசாயிகளின் பேச்சுவார்த்தைக்காக தில்லி வந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று (வியாழக்கிழமை) பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். தற்போது பாஜகவை காக்கும் வகையில் விவசாயிகளின் போராட்டத்தால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கூறுகிறார். 
பஞ்சாப் முதல்வர் பாஜகவின் முதல்வர் போன்று செயல்படுகிறார். அவர் பேசுவது பாஜகவிற்கு ஆதரவாகவுள்ளது'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com