ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தில்லி எல்லையில் போராடி வந்த விவசாயி பலி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி செவ்வாய்க்கிழமை பலியானார்.

News image

கோப்புப்படம்

Updated On :8 டிசம்பர் 2020, 10:22 am

ANI

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி செவ்வாய்க்கிழமை பலியானார்.

ஹரியாணா மாநில சோனிபத்தின் கோஹானா பகுதியில் வசித்து வந்தவர் அஜய் மூர்(வயது 32). இவர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையான திக்ரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், இன்று காலை திறந்தவெளி பூங்காவில் மூர் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் நாளை 5ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.