பஞ்சாப்: 12 மாவட்டங்களில் 24% கரோனா பாதிப்பு
பஞ்சாபில் 12 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 24.19 சதவிகிதத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
பஞ்சாபில் 12 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 24.19 சதவிகிதத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் மக்கள் தொகை அடிப்படையில் 12 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 4,678 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 4.03 சதவிகிதம் அறிகுறிகளுடனும், 95.9 சதவிகிதத்தினர் அறிகுறிகளற்றவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர்.
நகர்புறங்களில் 30.5 சதவிகிதத்தினரும், கிராமப்புறப் பகுதிகளில் 21 சதவிகிதத்தினரும் தொற்று உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
லுதியானா பகுதியில் 54.6 சதவிகிதத்தினர் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்புறங்களில் அதிக அளவாக பெரோஸ்பூர், ஜலந்தர், மொஹாலி ஆகிய நகர்புறப் பகுதிகளில் 71.7 சதவிகிதம் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...