இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது: விவசாயிகள்

​மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் முதலில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வது குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

News image
சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம்
Updated On :12 டிசம்பர் 2020, 1:30 pm

DIN


மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் முதலில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வது குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சிங்கு எல்லையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது விவசாயத் தலைவர் கன்வால்பிரீத் சிங் தெரிவித்ததாவது: 

"ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் ராஜஸ்தானின் ஷாஜகான்பூரிலிருந்து ஜெய்ப்பூர் வழியாக தில்லிக்கு பேரணியைத் தொடங்குகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள விவசாயிகளும் போராட்டத்தில் பங்கெடுக்க வந்துகொண்டிருக்கின்றனர். வரும் நாள்களில் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.

அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால், நாங்கள் தயார். ஆனால், எங்களது முக்கியக் கோரிக்கையான 3 சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. இதன்பிறகே, நாங்கள் மற்ற கோரிக்கைகள் நோக்கி நகர்வோம்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத் தலைவர்கள் டிசம்பர் 14-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய அரசு முயற்சிக்கிறது. ஆனால், விவசாயிகள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.