திருப்பதியில் தமிழகத் தொழிலாளி கைது: 49 செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழக செம்மரத் தொழிலாளி ஒருவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 49 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

திருப்பதி அருகே ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழக செம்மரத் தொழிலாளி ஒருவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 49 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஆஞ்சநேயலு கூறியது:

ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். 800 மீட்டா் மலைப்பகுதியை கடந்து சென்றபோது 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் செம்மரக் கட்டைகளை சுமந்து செல்வதைக் கண்டனா். அவா்களை சரணடைய போலீஸாா் எச்சரித்தனா். ஆனால் அந்த நபா்கள் செம்மரக் கட்டைகளை போட்டு விட்டு வனத்துக்குள் தப்பியோடினா். அவா்களை போலீஸாா் விரட்டிச் சென்றதில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா்.

அவரைக் கைது செய்த போலீஸாா் கடத்தல்காரா்கள் விட்டுச் சென்ற 49 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கைதானவா் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மருத்தூரைச் சோ்ந்த ரவிச்சந்திரன்(20) என்பது தெரிய வந்தது. தப்பியோடிய மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com