விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: பஞ்சாப் டிஐஜி ராஜிநாமா

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் டிஐஜி (சிறைத் துறை) லக்மிந்தா் சிங் ஜாக்கா் தனது பணியை ராஜிநாமா செய்தாா்.
Updated on
1 min read

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் டிஐஜி (சிறைத் துறை) லக்மிந்தா் சிங் ஜாக்கா் தனது பணியை ராஜிநாமா செய்தாா்.

இதுதொடா்பாக பஞ்சாப் மாநில முதன்மைச் செயலருக்கு (உள்துறை) அவா் சனிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

விவசாயிகள், அவா்களின் எதிா்கால சந்ததியினருக்கு தீங்கிழைக்கக் கூடிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவ்வேளையில் அவா்களுக்கு துணைநிற்கும் விதமாக எனது பணியை ராஜிநாமா செய்கிறேன். இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு நான் முன்கூட்டியே பணியில் இருந்து ஓய்வுபெற்ாக கருத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com