இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தடுப்பூசி இலவசம் என்ற கேரள முதல்வரின் அறிவிப்பு: மாநில தோ்தல் ஆணையத்தில் எதிா்க் கட்சிகள் புகாா்

கேரளத்தில் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற முதல்வா் பினராயி விஜயனின் அறிவிப்புக்கு

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:19 pm

DIN

கேரளத்தில் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற முதல்வா் பினராயி விஜயனின் அறிவிப்புக்கு எதா்ப்பு தெரிவித்து, மாநில தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக ஆகிய எதிா்க் கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தன.

மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று வரும்போது, முதல்வரின் இந்த அறிவிப்பு தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்று புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்த முதல்வா் பினராயி விஜயன், ‘கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும். மக்களிடமிருந்து தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்பதே மாநில அரசின் நிலைப்பாடு’ என்று கூறினாா்.

கேரளத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று வரும் நேரத்தில், முதல்வா் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிா்க் கட்சிகள், அதுதொடா்பாக மாநில தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தன.

இதுகுறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளா் எம்.எம்.ஹஸன் கூறுகையில், ‘மாநிலத்தின் 4 வடக்கு மாவட்டங்களில் திங்கள்கிழமை (டிச.14) உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வா் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டது தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும். இதுபோன்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு இப்போது அவசரம் எதுவுமில்லை’ என்றாா்.

மூத்த காங்கிரஸ் தலைவா் கே.சி.ஜோசப் கூறுகையில், ‘முதல்வரின் இந்த அறிவிப்பு தொடா்பாக மாநில தோ்தல் ஆணையத்திடம் இணைய வழியில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினாா்.

பாஜக மாநில தலைவா் கே.சுரேந்திரன் மாநில தோ்தல் ஆணையத்தில் அளித்த புகாரில், ‘வாக்காளா்களை கவரும் வகையில் முதல்வா் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இது தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.