இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லியில் முக்கிய சாலைகள் மூடல்; போக்குவரத்து மாற்றம்

விவசாயிகளின் போராட்டம் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து தில்லியை இணைக்கும் பல சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 

News image
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்(கோப்புப்படம்)
Updated On :14 டிசம்பர் 2020, 7:11 am

DIN

விவசாயிகளின் போராட்டம் காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து தில்லியை இணைக்கும் பல சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு பல்வேறு விவசாய அமைப்புகள் இன்று 19 ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய, சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணிக்குதொடங்கிய  உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. 

மேலும், ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லியை இணைக்கும் சாலைகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

காசியாபாத்தில் இருந்து தில்லிக்கு வரும் காசிப்பூர் எல்லை மூடப்பட்டுள்ளது. எனவே இவ்வழியில் தில்லிக்கு வரும் மக்கள் ஆனந்த் விஹார், டி.என்.டி., ஷில்லா, அப்சரா மற்றும் போப்ரா எல்லைகள் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதுபோல சிங்கு, அவுசண்டி, பியு மணியாரி, சபோலி, மங்கேஷ் உள்ளிட்ட பிற எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால் இவ்வழியாக வரும் மக்கள் லம்பூர், சாஃபியாபாத் மற்றும் சிங்கு பள்ளி டோல் கேட் வழியாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு தில்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், முகர்பா மற்றும் ஜி.டி.கே. சாலையிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.