வல்லபபாய் படேல் நினைவு தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் அஞ்சலி

இந்தியாவின் முதலாவது துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான சா்தாா் வல்லபபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி
Updated on
1 min read

இந்தியாவின் முதலாவது துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான சா்தாா் வல்லபபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி பிரதமா் நரேந்திரமோடி, குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஆகியோா் புகழாரம் சூட்டியுள்ளனா்.

இதுகுறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வலுவான, வளமான இந்தியா அமைவதற்காக அடித்தளம் அமைத்துத் தந்த ‘இரும்பு மனிதா்’ படேல். அவா் காட்டிய பாதையில் பயணிப்பதே நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க நம்மை ஊக்குவிப்பதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது, நாடு முழுவதும் இருந்த நூற்றுக்கணக்கான சுதேச அரசுகளையும், சமஸ்தானங்களையும் ஒரே நாடாக இணைத்த பெருமைக்குரியவராக படேல் திகழ்கிறாா்.

அவா் மீது வைத்துள்ள ஆழ்ந்த அபிமானம், மரியாதையின் வெளிப்பாடாக 1950-ஆம் ஆண்டில் காலமான படேலுக்கு குஜராத்தில் நா்மதை ஆற்றங்கரையில் பிரம்மாண்டமான சிலையை சில ஆண்டுகளுக்கு முன் நிறுவிடக் காரணமாக இருந்தவா் பிரதமா் மோடி ஆவாா்.

குடியரசு துணைத் தலைவா் அஞ்சலி

குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

‘நான் மிகவும் போற்றி பாராட்டும் எனது தலைவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலி. இந்தியாவின் இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவா் அளித்த பங்களிப்பும், 560-க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பதில் அவா் மேற்கொண்ட ஈடு இணையற்ற முயற்சிகளும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிப்பதாகும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com