இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாயிகளுடன் அமர்ந்து பேசி பிரச்னையைத் தீர்க்கவே அரசு விரும்புகிறது: மத்திய அமைச்சர்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்த்து வைக்கவே மத்திய அரசு விரும்புவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

News image
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
Updated On :17 டிசம்பர் 2020, 12:21 pm

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் அமர்ந்து பேசி பிரச்னைகளைத் தீர்த்து வைக்கவே மத்திய அரசு விரும்புவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், சிங்கு, திக்ரி உள்ளிட்ட தில்லியின் எல்லைப் பகுதிகளில் 3 வாரங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காணொலி வாயிலாக விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

போராட்டம் செய்யும் விவசாயிகள் பலருக்கு தாங்கள் எதை எதிர்த்து போராடுகிறோம் என்றே தெரியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை, ரகசியமாக விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கக்கூடாது, விவசாய மண்டிகள் இருக்க வேண்டும் என விவசாயிகளின் மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு கூறுகிறது. எனினும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாங்கள் விவசாயிகளுடன் அமர்ந்து பேசி அவர்களின் பிரச்னையைத் தீர்க்க தயாராக இருக்கிறோம் என்று பேசியுள்ளார். 

மேலும் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கரோனாவிலிருந்து மீண்டு நாம் பழைய நிலைக்குத் திரும்புவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.