இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிங்கு எல்லையில் தங்குவதற்கு நீண்ட கூடாரங்களைப் போடும் விவசாயிகள்

தில்லியின் எல்லைப் பகுதியான சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், மேலும் ஏராளமான நீர் புகாத கூடாரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News image
சிங்கு எல்லையில் நீண்ட கூடாரங்களைப் போடும் விவசாயிகள்
Updated On :18 டிசம்பர் 2020, 9:15 am

DIN


புது தில்லி: தில்லியின் எல்லைப் பகுதியான சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், மேலும் ஏராளமான நீர் புகாத கூடாரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து 23-ஆவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின், தங்களது போராட்டம் மேலும் பல நாள்கள் நீடிக்கும் என்பதை உறுதி செய்யும் வகையிலும், தற்போது நிலவும் மிக மோசமான குளிர்நிலையை எதிர்கொள்ளவும் இந்த கூடாரங்களை அமைத்து வருகிறார்கள்.

இந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து நாங்கள் நடத்தி வரும் போராட்டம் மேலும் நீடித்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறோம். இந்த சட்டங்களுக்கு எதிரான எங்களது போராட்டத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தயால் சிங் தெரிவித்துள்ளார்.

தலைநகர் தில்லியில் தற்போது வெப்பநிலை மிகவும் குறைந்து வரும் நிலையில், போராட்டத்தில் விவசாயிகளுடன் பெண்கள், குழந்தைகள், முதியவர்களும் இணைந்துள்ளதால் அவர்களும் கடும் துன்பத்துக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, விவசாயிகளை குளிரிலிருந்து காக்கும் வகையில், மீக நீண்ட, நீர் புகாத கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த போராட்டம் வெகு நாள்களுக்கு நீடிக்கும், எங்களுடன் பெண்கள் குந்தைகள் இருக்கிறார்கள். எனவேதான் நீண்ட கூடாரங்களை அமைத்து வருகிறோம் என்கிறார் மற்றொரு விவசாயி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.