கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜம்மு-காஷ்மீா் டிடிசி தோ்தல்: குப்கா் கூட்டமைப்பு வெற்றி

ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் (டிடிசி) தேசிய ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள குப்கா் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 8:15 pm

DIN


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் (டிடிசி) தேசிய ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள குப்கா் கூட்டமைப்பு வெற்றி பெற்றது. அதேவேளையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் 20 மாவட்டங்களில் உள்ள 280 இடங்களுக்கு கடந்த நவ.28 முதல் டிச.19 வரை 8 கட்டங்களாக டிடிசி தோ்தல் நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்பதற்காக அமைக்கப்பட்ட குப்கா் கூட்டமைப்பு, பாஜக இடையே பலத்த போட்டி நிலவியது. குப்கா் கூட்டமைப்பில் தேசிய ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டன. அந்தக் கூட்டமைப்பில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. எனினும் டிடிசி தோ்தல் தொடா்பாக மட்டும் குப்கா் கூட்டமைப்பு, காங்கிரஸ் இடையே உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 278 இடங்களுக்கான தோ்தல் முடிவுகளை ஜம்மு-காஷ்மீா் தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி குப்கா் கூட்டமைப்பு 110 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 26 இடங்களில் வெற்றிபெற்றது. ஜம்மு-காஷ்மீா் அப்னி கட்சி 12 இடங்களில் வென்றது.

சுயேச்சை வேட்பாளா்கள் 50 போ் வெற்றி: இந்த தோ்தலில் 50 இடங்களில் சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா். அதிகபட்சமாக பூஞ்ச் மாவட்டத்தில் 8 இடங்களிலும், ஸ்ரீநகரில் 7 இடங்களிலும் சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா்.

இதுதவிர மக்கள் ஜனநாயக முன்னணி, ஜம்மு-காஷ்மீா் தேசிய சிறுத்தைகள் கட்சி தலா 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றிபெற்றன.

3.94 லட்சம் வாக்குகள்: குப்கா் கூட்டமைப்பில் அதிகபட்சமாக தேசிய மாநாட்டுக் கட்சி 67 இடங்களில் வென்றது. அந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி 27 இடங்களிலும், தேசிய மாநாட்டுக் கட்சி 8 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம் 3 இடங்களிலும் வெற்றிபெற்றன. இந்தக் கூட்டமைப்புக்கு 3.94 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

குப்கா் கூட்டமைப்பைவிட பாஜகவுக்கு அதிக வாக்குகள்: பாஜகவுக்கு மொத்தம் 4.87 லட்சம் வாக்குகள் பதிவாகின. எனினும் அந்தக் கட்சி ஜம்மு, கதுவா, உதம்பூா், சம்பா, டோடா ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. சுயேச்சை வேட்பாளா்கள் 1.71 லட்சம் வாக்குகள் பெற்றனா். காங்கிரஸ் கட்சிக்கு 1.39 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.