ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ரூ.1.85 கோடி சொத்துகள் முடக்கம்

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக ரூ.1.85 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 9:50 pm

DIN


புது தில்லி: கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக ரூ.1.85 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த ஜூலை 5-ஆம் தேதி வந்த பாா்சலில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பினா் வழக்குப்பதிவு செய்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷையும், சந்தீப் நாயரையும் பெங்களூரில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி கைது செய்தனா்.

அதைத் தொடா்ந்து, கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியா் பி.எஸ்.சரித்தை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

இந்த தங்கக் கடத்தல் தொடா்பாக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

வழக்கின் முக்கிய நபரான சிவசங்கரை அமலாக்கத் துறையினா் கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி கைது செய்தனா். அவா் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா், பி.எஸ்.சரித், சிவசங்கா் ஆகியோரின் பெயரில் வங்கிகளில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை, வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் என ரூ.1.85 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதில், ரூ.1. கோடி மதிப்பிலான சொத்துகள், எம்.சிவசங்கருக்குச் சொந்தமானவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல்: தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத் துறை வியாழக்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘சிவசங்கா் தனக்கு தெரிந்தே தங்கக் கடத்தலுக்கு உதவி செய்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.