கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறப்பு

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 11:11 pm

DIN


சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். பூஜை நிறைவடைந்ததை அடுத்து கடந்த 26 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் மகர விளக்கு திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்காக கோயில் நடை புதன்கிழமை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் வியாழக்கிழமை காலை முதலே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.
மகர விளக்கு விழாக் காலத்தில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனைக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிலக்கல், பம்பை பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மகர விளக்கு பூஜைக்கு பிறகு ஜனவரி 20 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சபரிமலை கோயில் மேல்சாந்தி (தலைமை பூஜாரி) வி.கே.ஜெயராஜன் போற்றி கரோனா அச்சம் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூன்று பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மேல்சாந்தி தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ள கோயில் நிர்வாகம், இதனால் கோயிலின் வழக்கமான பூஜைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
கோயில் விதிகளின்படி மேல்சாந்தியாக பொறுப்பேற்பவர் ஓராண்டுக்குப் பிறகே சபரிமலையில் இருந்து கீழே வர முடியும் என்ற நிலையில், மேல்சாந்திக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால்தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.