கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு தொற்று; 299 பேர் பலி 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2020, 4:36 am

DIN

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 21,882 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 26,139 போ் விடுபட்டுள்ளனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் இதுவரை 98,60,280 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். உலகிலேயே இந்தியாவில்தான் கரோனாவில் இருந்து மீண்டோா் சதவீதம் அதிகமாக உள்ளது.

நாட்டில் வியாழக்கிழமை காலை வரை 1,02,66,674 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 95.99 சதவீதம் போ் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டனா்.

இப்போதைய சூழ்நிலையில் 2,57,658 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பெறுவோர் 2.56 சதவீதமாக உள்ளது. தொடா்ந்து 10-ஆவது நாளாக கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 299 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,48,738 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த பாதிப்பில் 1.45 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, டிசம்பா் 30-ஆம் தேதி வரை 17,20,49,274 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 11,27,244 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.