கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தாஜ் மகாலைப் பார்வையிட்டு வருகிறார் டிரம்ப்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலைக் காண வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 12:34 pm

DIN


ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலைக் காண வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர், டிரம்ப் தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Story image

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் தற்போது தாஜ் மகால் வந்தடைந்துள்ளனர். அங்கு மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட டிரம்ப், வருகைப் பதிவேட்டில் தன்னுடைய வருகையைக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து தற்போது மனைவியுடன் இணைந்து தாஜ் மகாலைப் பார்வையிட்டு வருகிறார் டிரம்ப். 

அவருக்கு சுற்றுலா வழிகாட்டி, தாஜ் மகாலின் சிறப்புகள் குறித்து விளக்கினார். தாஜ் மகால் முன்பு டொனால்ட் டிரம்ப் - மெலனியா தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிறகு, தாஜ் மகாலில் உள்ள விருந்தினர் பதிவேட்டில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

முன்னதாக இன்று காலை ஆமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோரை பிரதமர் மோடி வரவேற்றனார். பின்னர் தனித்தனி வாகனங்களில் சபர்மதி ஆசிரமம் சென்றனர்.

Story image

அங்கு மகாத்மா காந்தியின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்திய டிரம்ப் தம்பதி, இராட்டையில் நூல் நூற்று மகிழ்ந்தனர்.

டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆமதாபாத்தில் உள்ள மொடெரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நமஸ்தே டிரம்ப் என்ற சிறிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், இரு தலைவர்களும் உரையாற்றினர்.

இவ்விரு முக்கிய நிகழ்ச்சிகளும் நிறைவு பெற்றதை அடுத்து, பிரதமர் மோடி புது தில்லி விரைந்தார். பிறகு, டொனால்ட் டிரம்ப், மனைவி மற்றும் மகள், அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகள் குழுவினருடன் ஆக்ரா சென்றுள்ளார்.

அங்கு தாஜ் மகாலை பார்வையிட்ட பிறகு, புது தில்லி செல்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.