கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ 1 லட்சம் கட்டணம் : பணம் செலுத்தாத பெண் மருத்துவர் சிறைபிடிப்பு

கரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ 1 லட்சம் கட்டணமாக செலுத்த இயலாத பெண் மருத்துவர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

News image

கரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ 1 லட்சம் கட்டணமாக செலுத்த இயலாத பெண் மருத்துவர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Updated On :5 ஜூலை 2020, 12:53 pm

ANI

ஹைதராபாத்: கரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ 1 லட்சம் கட்டணமாக செலுத்த இயலாத பெண் மருத்துவர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் சுல்தானா. இவருக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்னதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து வீட்டில் தன்னைத்தானே அவர் தனிமைப்படுதிக் கொண்டுளார். அதன்பின்னர் கடந்த 1-ஆம் தேதியன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே உடனடியாக சதேர்காட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஒரு நாள் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மறுநாள் 2-ஆம் தேதியன்று அவரை ரூ. 40 ஆயிரத்தை காப்புத் தொகையாக செலுத்துமாறு மருத்துவமனை கூறியுள்ளது, அத்துடன் அவருக்கு ஒரு நாள் சிகிச்சைக் கட்டணமாக ரூ. 1.15 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்துக் கேள்வி கேட்டு, பணம் செலுத்த இயலாது என்று கூறியபோது அவரை அங்கு ஒரு அறையில் இருக்க வைத்துள்ளனர். அத்துடன் ஞாயிறு அதிகாலையில் ரூ. 1.30 லட்சத்தை கட்டணமாக செலுத்திய பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதுதொடர்பாக அவரது புகாரை விசாரித்த சதேர்காட் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ், ‘சுல்தானா அந்த மருத்துவமனையில்  அடைத்து வைக்கப்படவில்லை; நாங்கள் அங்குள்ள சிசிடிவி பகுதிகளை முழுமையாக ஆராய்ந்து விட்டோம். எனவே அவரது புகாரின் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை’ என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.