பிகாரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
பிகாரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


பிகாரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிகார் மாநிலம், பாஷ்சிம் சம்பரன் மாவட்டம் பகாகா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சகஸ்த்திர சீமா பால் மற்றும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடிப்படை காவல்துறையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் அதிரடிப்படை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்து நவீன ரக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சண்டையில், காவல்துறை தரப்பில் சகஸ்த்திர சீமா பால் இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...