மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அசோக் கெலாட் சகோதரர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

​உர ஊழல் வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசெய்ன் கெலாட் இல்லம் உள்பட 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று (புதன்கிழமை) சோதனை நடத்தினர்.

News image
அசோக் கெலாட் (கோப்புப்படம்)
Updated On :22 ஜூலை 2020, 12:04 pm

DIN


உர ஊழல் வழக்கில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசெய்ன் கெலாட் இல்லம் உள்பட 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று (புதன்கிழமை) சோதனை நடத்தினர்.

உர உழல் வழக்கில் சுங்கத் துறை அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன் அடிப்படையில், இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி அமலாக்கத் துறை மூத்த அலுவலர் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:

"குஜராத்தில் 4, ராஜஸ்தானில் 6, மேற்கு வங்கத்தில் 2 மற்றும் தில்லியில் 1 இடம் என நாடு முழுவதும் 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. அக்ராசெய்ன் கெலாட்டுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. அவருடைய நிறுவனமான அனுபம் கிருஷிதான் இந்தியன் பொட்டாஷ் லிமிடட் (ஐபிஎல்) நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பாக உள்ளது." என்றார்.

இந்த வழக்கு குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

"அக்ராசெய்ன் கெலாட்டுக்குச் சொந்தமான நிறுவனம்தான் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள எம்ஓபி உரத்தை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ளது. ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த எம்ஓபி உரத்தை ஐபிஎல் நிறுவனம் இறக்குமதி செய்து, அதை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்கிறது. இந்த வழக்கில் அக்ராசெய்ன் கெலாட்டுக்கு சுங்கத் துறை ரூ. 7 கோடி அபராதம் விதித்துள்ளது.

2007 முதல் 2009 வரை அக்ராசெய்ன் கெலாட்தான் ஐபிஎல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர். அவரது நிறுவனம் எம்ஓபி உரத்தை மானிய விலைக்கு வாங்கி, அதை விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்குப் பதிலாக மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருக்கிறார். அந்த நிறுவனங்கள், அதை மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துள்ளன." என்றனர்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்தச் சூழலில் அமலாக்கத் துறையினர் இந்த சோதனையை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.