மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும்: அசோக் கெலாட்

​ராஜஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திப்போம், தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

News image
​ராஜஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திப்போம், தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
Updated On :25 ஜூலை 2020, 11:46 am

DIN


ராஜஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திப்போம், தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அசோக் கெலாட் பேசுகையில், "தேவைப்பட்டால் நாம் குடியரசுத் தலைவரைச் சந்திப்போம். மேலும் அவசியப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்துவோம்." என்றார்.

இதைத் தொடர்ந்து அசோக் கெலாட் இன்று ஆளுநரைச் சந்தித்து சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான புதிய முன்மொழிவை வழங்கவுள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தான் ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மிகவும் குறுகிய கால அறிவிப்புடன் பேரவையைக் கூட்ட வேண்டும் என்று ஜூலை 23 இரவு மாநில அரசு கோரியிருந்தது. அமைச்சரவைக் குறிப்பில் சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை. மேலும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவும் இல்லை. அவர்களது கோரிக்கை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

பேரவையை குறுகிய காலத்தில் கூட்டுவதற்கு அதில் எவ்விதக் காரணமும் குறிப்பிடப்படவில்லை. சாதாரண நடைமுறைப்படி, பேரவையைக் கூட்டுவதற்கு 21 நாள்கள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.