கார்கில் நினைவு தினத்தில், நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.
கார்கில் போர் 21-ஆவது வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கார்கில் நமது சுய மரியாதையின் சின்னம் மட்டுமல்ல. அநீதிக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையும் கூட. நாட்டின் தற்காப்புக்காகவே அன்றி இது தாக்குதல் அல்ல என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார்.
கார்கில் விஜய் திவாஸ் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க ராணுவ வீரர்களின் சேவை, வீரம் மற்றும் தியாகத்தின் கொண்டாட்டம் ஆகும். நமது ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத தைரியமும், தேசபக்தியும் இந்தியா பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.
போரில் பங்கேற்று ஊனமுற்றவர்களாக ஆன போதிலும், தொடர்ந்து தங்களால் முடிந்தவரை நாட்டுக்கு சேவை செய்யும் வீரர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
கார்கில் விஜய்யின் 21-ஆவது நினைவு தினத்தில், வரலாற்றில் உலகம் கண்ட மிக சவாலான சூழ்நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

சபலென்கா, ஸ்வியாடெக், எலா வெற்றி

வி.சி.க.வின் எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஃபின் ஆலன் அபாரம்: கொல்கத்தாவுக்கு 4-ஆவது வெற்றி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

