முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

'சவாலான சூழ்நிலையில் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்கள்' - அமைச்சர் ராஜ்நாத் சிங்

கார்கில் நினைவு தினத்தில், நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார். 

News image

அமைச்சர் ராஜ்நாத் சிங்

Updated On :26 ஜூலை 2020, 11:45 am IST

கார்கில் நினைவு தினத்தில், நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார். 

கார்கில் போர் 21-ஆவது வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கார்கில் நமது சுய மரியாதையின் சின்னம் மட்டுமல்ல. அநீதிக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையும் கூட. நாட்டின் தற்காப்புக்காகவே அன்றி இது தாக்குதல் அல்ல என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார்.

கார்கில் விஜய் திவாஸ் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க ராணுவ வீரர்களின் சேவை, வீரம் மற்றும் தியாகத்தின் கொண்டாட்டம் ஆகும். நமது ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத தைரியமும், தேசபக்தியும் இந்தியா பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.

போரில் பங்கேற்று ஊனமுற்றவர்களாக ஆன போதிலும், தொடர்ந்து தங்களால் முடிந்தவரை நாட்டுக்கு சேவை செய்யும் வீரர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கார்கில் விஜய்யின் 21-ஆவது நினைவு தினத்தில், வரலாற்றில் உலகம் கண்ட மிக சவாலான சூழ்நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.