மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

21 நாள்கள் அவகாசம் வழங்கி பேரவையைக் கூட்டலாம்: ராஜஸ்தான் அரசுக்கு ஆளுநர் நிபந்தனை

​21 நாள்கள் அவகாசம் வழங்கி சட்டப்பேரவையைக் கூட்ட ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இன்று (திங்கள்கிழமை) ஒப்புக்கொண்டார்.

News image
​21 நாள்கள் அவகாசம் வழங்கி சட்டப்பேரவையைக் கூட்ட ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இன்று (திங்கள்கிழமை) ஒப்புக்கொண்டார். (கோப்புப்படம்)
Updated On :27 ஜூலை 2020, 11:22 am

DIN


21 நாள்கள் அவகாசம் வழங்கி சட்டப்பேரவையைக் கூட்ட ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இன்று (திங்கள்கிழமை) ஒப்புக்கொண்டார்.

ராஜஸ்தான் துணை முதல்வராகவும், மாநிலத் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் விரும்புகிறார்.

இதையடுத்து, பேரவையைக் கூட்டுவதற்கான அமைச்சரவைத் தீர்மானம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், பேரவையைக் கூட்டுவது தொடர்பாக 6 கேள்விகளை உள்ளடக்கிய கடிதத்தை முதல்வர் அசோக் கெலாட்டிடம் வழங்கினார் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா.

இதைத் தொடர்ந்து, மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் நடத்தி வரும் 31-ம் தேதி பேரவையைக் கூட்டுவதற்கான திருத்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த சனிக்கிழமை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா 3 பரிந்துரைகள் அடங்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். 

பேரவையைக் கூட்ட 21 நாள்கள் அவகாசம் அளித்து நோட்டீஸ் கொடுக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், அதை மாநில அரசு நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். கடைசியாக, கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக பேரவைக் கூட்டம் நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், 21 நாள்கள் நோட்டீஸ் அளித்து பேரவையைக் கூட்டலாம் என ஆளுநர் நிபந்தனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.