மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்கம்: இனி கரோனாவால் பலியானவர்களின் உடலைப் பார்க்க உறவினர்களுக்கு அனுமதி

மேற்கு வங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் வெள்ளிக்கிழமையன்று 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2020, 10:01 am

DIN


மேற்கு வங்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் வெள்ளிக்கிழமையன்று 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் புதிதாக மேற்கு வங்கத்தில் 427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 7,303 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 4 ஆயிரம் பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கம் திரும்பி வருவதாகவும், கரோனா பரிசோதனையை அதிகரித்திருப்பதும், நாள்தோறும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்று மாநில நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சில மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கரோனா பாதித்து மரணம் அடைவோரின் உடலை, அவரது உறவினர்கள் பார்க்க அனுமதி அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுவரை, கரோனா பாதித்தவர்களின் உடலை உறவினர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், மரணம் அடைந்தவரின் உடலை வெளியே தெரியும் வகையில் மூடிவைத்து, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று கரோனாவால் பலியானவரின் உடலை உறவினர்கள் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.